உயிரானவளே ...




 
சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...

என் கவிதையான நிலவே ....







அதிபயங்கரமாய்
ஈர்க்கப்பட்டும்
அசையமுடியாமல்
பின்னப்பட்டும்
சுருண்டு கிடக்கிறேன்
உன் நினைவு வலைகளில் ..

கனவுகளில் கூட
நகரமுடியாதபடி
என் மீது
அழுத்தி அமர்ந்தபடி
உன் நிழல் ..

வழியோர பயணங்களில்
ஆரவாரமான
இரைச்சல்களுகிடையே
மெலிதாக கேட்ட
சில பாடல் வரிகள் கூட
கொளுத்திவிட்டு போகிறது
உன்
நினைவுத்திரியை ...

நான்
எரியத்தொடங்கி
நாட்கள் வெகுவாயிற்று
புகைந்தும்
அணைந்தும் எரிந்தபடி ...
என்றும்
அணையாமலே
உன் நினைவுகளில்...

என் அன்பே ......



நீ
அதிஷ்டம் செய்தவள்
அன்பே ...

ஆம்
தினம் தினம்
புதுப்புது ஓவியங்களாய்
புத்துயிர் பெறுகின்றாய் ...
உன் உச்சி முதல்
பாதம் வரை
வர்ணனைகள் கொண்டு
வண்ணம் தீட்டுகிறேன் ...

திசை தெரியாமல்
புறப்பட்ட
என் நினைவு ஓடங்கள்
இதோ
சரியான பாதையில்
உன் நினைவுகளை
தழுவிக்கொண்டு ...
கரை சேர போகின்றன ...

இனியும்
மூடி வைப்பது
இயலாது கண்ணே ..

இடியும் மின்னலும்
எனை தாக்குகின்றன ..
உன் நினைவுகளை
இனி தேக்க
இதயத்தில் இடமில்லை ..

கவிமழையாய்
பொழிகின்றேன்
ஒரு துளியாவது
உனை தீண்டும் என்ற
நம்பிக்கையில் ....

நீ ...



நீ...
இனிய தென்றல் ...
என் இமைகளை
பார்வைகளால்
வருடி செல்கையில் ...
*
நீ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
*
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
*
நீ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
*
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...

கண்மணியே !!..



மறந்திடுவாயோ அன்பே
என் மௌனராகத்தை
என்றுமே நிலைக்காத
என் இதயராகத்தை ...

காணாமல் இருந்தால்
கரைபுரளும் கண்கள்
கடந்த காலமெல்லாம்
கைப்பிடித்த விரல்கள் ...

மறந்திடுவாயோ அன்பே
என் மனதின் ஆசைகளை
என்றுமே ஓயாத
என் இதய ஓசையை ...

பேசாமல் இருந்தால்
மௌனமாய் அழுதிருக்கும்
என்றுமே இமையாக
ஏக்கமாய் தவித்திருக்கும் ...

மறந்திடாதே அன்பே
உன் உயிரிதனை...
அதுவும் மறைந்திடுமே
இவ்வுலகை மறந்தே ..

கண்மணியே !..


நிலவே
மறைந்ததேனோ
நினைவு மேகம்
மறைத்ததோ எனையும்
இளம் தென்றலாய்
எனை தழுவிய
நீயும்
எங்கோ வெகு தூரம்
விடை சொல்லாமல்
விட்டு சென்றதெங்கே ???..

இதயத் தோட்டத்தில்
ஆசை பூவெல்லாம்
வீணாக உதிர்ந்து
வீழ்கிறதே மண்ணில் ...

உனக்காகவே
மீண்டும் ஒரு ஜென்மம்
எடுத்திடுவேன்...
நீ
உறங்க ..
அன்றும்
தாலாட்டும் தொட்டிலாய்
என் இதயம் ..
உனை தாங்கி நிற்கும்
கண்மணியே ...

என்னவளே !!


அன்பே
விடை தெரியாமல்
வியக்கின்றேன் ...

முழு நிலவாம்
உன் முக அழகா
இல்லை ..

முல்லை
பூக்களாய்
இதழ் விரியும்
உன் சிரிப்பழகா
இல்லை..

அழகான
தண்ணீர் தேக்கத்தில்
அர்த்த ஜாமத்தில்
பிரதிபலிக்கும்
பௌர்ணமி நிலவாய்
உறவாடி விளையாடும்
உன் கருவிழி அழகா..
இல்லை..

கண்ணா
என
என் பெயரை
காதலோடு
காற்றினில்
கரைய விடுகையில்
கடித்துவிட
நான் துடிக்கும்
உன் கவர்ச்சி
இதழ் அழகா
இல்லை..

பாசம் பணிவு
இரக்கம் என
அத்தனை குணங்களையும்
அளவில்லாமல்
அள்ளி தரும்
உன் மன அழகா ...

எங்கே
மயங்கினேன்...
எனத் தெரியவில்லை
அன்பே ..

உனக்கு
தெரிந்திருந்தால்
சொல்வாயா ? ..
பொக்கிசமாய்
நீயும்
என்னில்
புகுந்து விட்ட
ரகசியத்தை ,...

என்னவளே !!!...


இதயம்
பட படவென
துடிக்கிறது பெண்ணே
நெருங்கிடவேண்டும்
உன்
நிழலையாவது
நான் பார்த்திட வேண்டும் ..

காலம்
கடந்து விட்டது
காத்திருக்க நேரமில்லை
கனவுகள்
கலைந்து போனாலும்
நினைவுகளை
நிலைக்க விடமாட்டேன்

என் சுவாசம்
சிறைபடும்முன்
உன் வாசத்தில்
நானும்
வசப்பட வேண்டும்

உன்
பார்வை
கணைகளால்
நான் ஊனமாக வேண்டும் ...
உன் இதழ் தரும்
தீண்டல்களே
அதற்கு
மருந்தாக வேண்டும் ...

மஞ்சமாக
மலர் நீயும்
மடி தரவேண்டும்
தஞ்சமாக
நானும் அதில்
தலை சாய்க்க வேண்டும்

உன்
மார்போடு
முகம் புதைத்து
நான் அழ வேண்டும்
மலர் உந்தன் கைகள்
எனைத் தழுவ வேண்டும்

என்றுமே
என்னவளாய்
நீ இருக்க வேண்டும் ...
உனை பிரியும்
நாள் அன்று
என் உயிர்
பிரிய வேண்டும் ..

என்னவளே !...



அன்பைத் தேடி
அலைந்துதேய்ந்த
நாட்களின்
இருண்ட
இரவுகளில்...


சிறு புள்ளி
வெளிச்சமாய்
எங்கோ தூரத்தில்
நீ ...நீயே தான்

நம்பிக்கை
கை தர
நிமிர்ந்து
நடை போட்டே
நெருங்கிவிட்டேன்
உன்னை..

ஆயுள்
குறைகிறது
இந்த ஜென்மம்
தீர்ந்து விடலாம்

மனதில் மட்டும்
அவ்வப்போது
சிறு சலனம் ..

நிருபிக்க முடியாமல்
போய் விடுமோ
நீயே
எனதுயிர் என்ற
உண்மை !!!...