என்னவளே !...



அன்பைத் தேடி
அலைந்துதேய்ந்த
நாட்களின்
இருண்ட
இரவுகளில்...


சிறு புள்ளி
வெளிச்சமாய்
எங்கோ தூரத்தில்
நீ ...நீயே தான்

நம்பிக்கை
கை தர
நிமிர்ந்து
நடை போட்டே
நெருங்கிவிட்டேன்
உன்னை..

ஆயுள்
குறைகிறது
இந்த ஜென்மம்
தீர்ந்து விடலாம்

மனதில் மட்டும்
அவ்வப்போது
சிறு சலனம் ..

நிருபிக்க முடியாமல்
போய் விடுமோ
நீயே
எனதுயிர் என்ற
உண்மை !!!...

4 comments:

thamizhparavai said...

நண்பர் விஷ்ணுவுக்கு...
அழகாய் இருக்கிறது கவிதை.கிட்டத்தட்ட என் மனநிலையைப் பிரதியெடுத்ததுபோல் எனக்குத் தோன்றியது.

Vishnu... said...

//தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணுவுக்கு...
அழகாய் இருக்கிறது கவிதை.கிட்டத்தட்ட என் மனநிலையைப் பிரதியெடுத்ததுபோல் எனக்குத் தோன்றியது.//


முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றிகள் நண்பரே
நமது இருவர்
மன நிலையும் ஒரே போல சஞ்சரிக்கிறது என நினைக்கிறேன் ..

அடிக்கடி வரவேண்டும்
என வேண்டும் ...

இனிய தோழன்
விஷ்ணு

Unknown said...

வெற்று வார்த்தைகளின்றி நற்றமிழ் தன்னில் உருவாகிய அழகிய கவிதை ந்ன்று!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்....

(http://www.sangkavi.com/2012/09/blog-post_19.html) மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்…

பகிர்வுக்கு நன்றி...