நீ ...



நீ...
இனிய தென்றல் ...
என் இமைகளை
பார்வைகளால்
வருடி செல்கையில் ...
*
நீ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
*
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
*
நீ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
*
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...