என்னவளே !!


அன்பே
விடை தெரியாமல்
வியக்கின்றேன் ...

முழு நிலவாம்
உன் முக அழகா
இல்லை ..

முல்லை
பூக்களாய்
இதழ் விரியும்
உன் சிரிப்பழகா
இல்லை..

அழகான
தண்ணீர் தேக்கத்தில்
அர்த்த ஜாமத்தில்
பிரதிபலிக்கும்
பௌர்ணமி நிலவாய்
உறவாடி விளையாடும்
உன் கருவிழி அழகா..
இல்லை..

கண்ணா
என
என் பெயரை
காதலோடு
காற்றினில்
கரைய விடுகையில்
கடித்துவிட
நான் துடிக்கும்
உன் கவர்ச்சி
இதழ் அழகா
இல்லை..

பாசம் பணிவு
இரக்கம் என
அத்தனை குணங்களையும்
அளவில்லாமல்
அள்ளி தரும்
உன் மன அழகா ...

எங்கே
மயங்கினேன்...
எனத் தெரியவில்லை
அன்பே ..

உனக்கு
தெரிந்திருந்தால்
சொல்வாயா ? ..
பொக்கிசமாய்
நீயும்
என்னில்
புகுந்து விட்ட
ரகசியத்தை ,...

1 comments:

Anonymous said...

well.. it's like I thought!