கண்மணியே !..


நிலவே
மறைந்ததேனோ
நினைவு மேகம்
மறைத்ததோ எனையும்
இளம் தென்றலாய்
எனை தழுவிய
நீயும்
எங்கோ வெகு தூரம்
விடை சொல்லாமல்
விட்டு சென்றதெங்கே ???..

இதயத் தோட்டத்தில்
ஆசை பூவெல்லாம்
வீணாக உதிர்ந்து
வீழ்கிறதே மண்ணில் ...

உனக்காகவே
மீண்டும் ஒரு ஜென்மம்
எடுத்திடுவேன்...
நீ
உறங்க ..
அன்றும்
தாலாட்டும் தொட்டிலாய்
என் இதயம் ..
உனை தாங்கி நிற்கும்
கண்மணியே ...

0 comments: